தமிழ்நாடு

இபிஎஸ்ஸை அங்கீகரிக்கக் கோரி தேர்தல் ஆணையத்தை சந்திக்கும் அதிமுக!

DIN

உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கக் கோரி இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளை அதிமுகவினர் இன்று சந்திக்கவுள்ளனர்.

அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வானது செல்லும் என்றும் கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும் உச்சநீதிமன்றம் நேற்று(வியாழக்கிழமை) தீர்ப்பு வழங்கியது.

மேலும், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட ஓ. பன்னீர்செல்வத்தின் மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், தில்லி சென்றுள்ள அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம், இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளை இன்று நேரில் சந்தித்து, அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக அங்கீகரிக்கக் கோரி மனு அளிக்கவுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT