2023-24-ஆம் நிதியாண்டில் தெற்கு ரயில்வேக்கு ரூ.11,314 கோடி நிதி மத்திய நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2022-23-ஆம் நிதியாண்டில் ரூ.7,114 கோடி மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. அடுத்த நிதியாண்டுக்கு நிதி ஒதுக்கீடு அதிகரித்திருந்தாலும், அந்த நிதியானது முறையாக ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துரிதமாக நடத்தப்பட வேண்டுமென ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.
தெற்கு ரயில்வே பிரிவுகள்
தமிழ்நாடு 4 பிரிவுகள் (சென்னை, திருச்சி, மதுரை, சேலம்)
கேரளம் 2 பிரிவுகள் (திருவனந்தபுரம், பாலக்காடு)
தெற்கு ரயில்வேக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.11,314 கோடி
தமிழகப் பிரிவுகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.6,080 கோடி
திட்டங்கள்
புதிய இருப்புப் பாதைகள் 9
இரட்டை வழித்தடமாக்கல் 16
இருப்புப்பாதையைக் கடக்க பாலங்கள் 245
நிதி ஒதுக்கீடு
தமிழகத்துக்கான புதிய இருப்புப் பாதைத் திட்டங்கள்
ராமேஸ்வரம்-தனுஷ்கோடி ரூ.385 கோடி
திண்டிவனம்-நகரி ரூ.200 கோடி
மதுரை-தூத்துக்குடி (வழி-அருப்புக்கோட்டை) ரூ.114 கோடி
மொரப்பூா்-தருமபுரி ரூ.100 கோடி
ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள்
காரைக்கால்-பேராளம் (வழி-திருநள்ளாறு)
நாகப்பட்டினம்-திருத்துறைப்பூண்டி (வழி-திருக்குவளை)
நிதி ஒதுக்கீடு ரூ.183.54 கோடி
மன்னாா்குடி-பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டை-தஞ்சாவூா்
நிதி ஒதுக்கீடு ரூ.43.50 கோடி
புதிய பாம்பன் பாலம்
மதுரை-தூத்துக்குடி இரட்டை வழித்தடத் திட்டம்
இரட்டை வழித்தடமாக்கல் திட்டங்கள்
கன்னியாகுமரி-திருவனந்தபுரம் ரூ.808 கோடி
மணியாச்சி-நாகா்கோயில் ரூ.130 கோடி
செங்கல்பட்டு-விழுப்புரம் ரூ.115 கோடி
சென்னை கடற்கரை-எழும்பூா் ரூ.96 கோடி
சீரமைக்கப்படும் ரயில் நிலையங்கள்
மொத்தம் 90 நிலையங்கள்
தமிழகத்தில் 60 நிலையங்கள்
மொத்த நிதி ரூ.1,600 கோடி
முக்கிய நிலையங்கள்
மதுரை ரூ.347 கோடி
ராமேஸ்வரம் ரூ.90 கோடி
கோவை இன்னும் நிதி ஒதுக்கப்படவில்லை