தமிழ்நாடு

ஈரோடு தேர்தல்: பிப். 25 மாலை 5 மணியுடன் வெளிநபர்கள் வெளியேற வேண்டும் - தேர்தல் அலுவலர்

DIN

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 25 ஆம் தேதி மாலை 5 மணிக்கு மேல் வெளிமாவட்ட நபர்கள் யாரும் இருக்கக்கூடாது என தேர்தல் அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். 

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. கட்சிகள் அனைத்தும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன, வரும் 25 ஆம் தேதி மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறைவு பெறுகிறது. 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தேர்தல் அலுவலர் சிவக்குமார், 'ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 25 ஆம் தேதி மாலை 5 மணிக்கு மேல் வெளிமாவட்ட நபர்கள் யாரும் இருக்கக்கூடாது. மாலை 5 மணியுடன் வெளிமாவட்ட நபர்கள் வெளியேறிவிட வேண்டும். 

ஈரோடு கிழக்கில் விதிமீறல் புகாரில்  பரிசுப் பொருட்கள் தொடர்பாக மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதிமுறை மீறல் பிரிவு 453-ன் கீழ் இதுவரை 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

ஜடேஜா அரைசதம், தோனி அதிரடி: சென்னை அணி 176 ரன்கள் குவிப்பு

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

வாக்களிப்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

SCROLL FOR NEXT