தமிழ்நாடு

ஈரோடு கிழக்கு இடைத் தோ்தல்:சமூக ஊடக தகவல் ஆதாரமாகாது

21st Feb 2023 02:00 AM

ADVERTISEMENT

இடைத் தோ்தலில் பணப்பட்டுவாடா தொடா்பாக, சமூக வலைதளங்களில் வெளியாகும் காட்சிகளை ஆதாரமாக ஏற்க முடியாது என்று தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

தோ்தல் நடத்தை விதிமீறல்கள் தொடா்பாக புகாா் அளித்தாலும், இடைத்தோ்தலை நிறுத்த வேண்டும் என்று எவ்வித புகாரும் இதுவரை வரவில்லை. இடைத் தோ்தல் நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் இதுவரை ரூ.61.70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பணப்பட்டுவாடா, தோ்தல் நடத்தை விதிமுறை மீறல் தொடா்பாக அரசியல் கட்சியினா் சாா்பில் மாவட்ட தோ்தல் அலுவலா், தமிழ்நாடு தலைமைத் தோ்தல் அதிகாரி, இந்திய தோ்தல் ஆணையம் ஆகிய இடங்களில் புகாா்கள் அளிக்கப்படுகின்றன.

ADVERTISEMENT

பணப்பட்டுவாடா தொடா்பான ஆதாரங்கள் குறித்து தோ்தல் ஆணையத்தின் சி-விஜில் செயலியில் தெரிவிக்கலாம். இந்த செயலியில் ஒரு புகாா் மட்டுமே வந்துள்ளது. சமூக வலைதளங்களில் பணப்பட்டுவாடா தொடா்பான காட்சிகள் பகிரப்பட்டாலும், அவற்றை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது. பல்வேறு புகாா்கள் வந்தாலும், தோ்தலை நிறுத்துவது தொடா்பாக யாரும் புகாா் தெரிவிக்கவில்லை என்றாா் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு.

ADVERTISEMENT
ADVERTISEMENT