அதிமுக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளுடன் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். தொடர்ந்து, பிரசாரத்தையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் 107 பேர் கொண்ட பணிக்குழு அமைக்கப்பட்டு தேர்தல் பணிகளை வேகப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் தேர்தல் பணிக்குழுவினருடன் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த ஆலோசனையில் தமாக, புதிய தமிழகம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர்.