கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் பகுதியில் ஒற்றைக் காட்டு யானை வலம்வருவதால் அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்கள், யானையை வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் அன்மை காலங்களாகவே காட்டு யானைகள் ஊருக்குள் வருவது அதிகரித்துள்ளது.
விவசாயிகளின் தோட்டங்களில் பகல் நேரங்களில் முகாமிடும் யானைகளால் இதுவரை பல விவசாயிகளும் தொழிலாளர்களும் யானைகள் தாக்கி பலியாகியுள்ளனர். விளைபயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகின்றன. அவ்வப்போது குடியிருப்புகளையும் சேதப்படுத்தி வருகின்றன.
இதையும் படிக்க | அரசு நூலகங்களில் வேலை வேண்டுமா? டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு!
இந்நிலையில், தேவர்சோலை அடுத்துள்ள செம்பக்கொல்லி கிராமத்திற்குள் நுழைந்த ஒற்றை யானை அங்குள்ள காப்பித் தோட்டத்தை சுற்றி வலம் வந்தது. அந்த பகுதி விவசாயிகள் விடுகளை விட்டு வெளியே வராமல் முடங்கிக் கிடந்தனர். யானையை காட்டுக்குள் விரட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.