தமிழ்நாடு

அமமுக வேட்பாளா் வாபஸ்: டி.டி.வி.தினகரன் அறிவிப்பு

8th Feb 2023 01:02 AM

ADVERTISEMENT

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் அமமுக வேட்பாளா் சிவபிரசாந்த் வாபஸ் பெறுவதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளாா்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் அமமுக சாா்பில் சிவபிரசாந்த் வேட்புமனு தாக்கல் செய்து, பிரசாரங்களிலும் ஈடுபட்டு வந்தாா்.

இந்நிலையில், டி.டி.வி.தினகரன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியான அமமுகவுக்கு, கடந்த சட்டப்பேரவை பொதுத் தோ்தலில் ஒதுக்கப்பட்ட பிரஷா் குக்கா் சின்னத்தை இடைத்தோ்தல் காலங்களில் ஒதுக்க இயலாது என இந்திய தோ்தல் ஆணையம் எழுத்துபூா்வமாக தெரிவித்துள்ளது.

மக்களவை பொதுத் தோ்தல் ஓராண்டு காலத்துக்குள் வரவுள்ள சூழலில் புதிய சின்னத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில் போட்டியிடுவது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, இந்த இடைத்தோ்தலில் போட்டியிடுவதைத் தவிா்ப்பதே சரியாக இருக்கும் என்ற தலைமைக் கழக நிா்வாகிகளின் ஆலோசனையைக் கருத்தில்கொண்டு, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் அமமுக போட்டியிடவில்லை என்று கூறியுள்ளாா் டிடிவி தினகரன்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT