ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வரலாறு படைக்கும் என முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.
அதிமுக வேட்பாளர் கே. எஸ். தென்னரசுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்ததையடுத்து செவ்வாய்க்கிழமை முதல் தனது பிரசாரத்தை தொடங்கியுள்ளார். ஈரோடு மணல்மேட்டில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் பிரச்சாரம் நடந்தது.
அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:
முதல் கட்ட தேர்தல் பிரசாரம் ஆலய வழிபாட்டோடு நடைபெற்று வருகிறது. தொடக்க நாளே குபேர மூலையில் பிரசாரம் தொடங்கப்பட்டு உள்ளன. குபேர மூலை என்றாலே செல்வத்தை பெருக்குவதும் , வெற்றியை பெருகுவது ஆகும்.
திண்டுக்கல் இடைத்தேர்தல் போல் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றியை பெறுவோம். புதன்கிழமை வேட்பாளர் அறிமுக கூட்டம் பிரம்மாண்ட முறையில் நடைபெற உள்ளது.
இதையும் படிக்க: நாடாளுமன்ற இரு அவைகளும் 12 மணி வரை ஒத்திவைப்பு!
அதிமுக வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. இடைத்தேர்தலில் வரலாற்றை படைப்போம். இரட்டை இலை என்றாலே வெற்றி என்பார்கள். ஒற்றுமை உணர்வோடு பணியாற்றி வருகிறோம் என்றார்.