தமிழ்நாடு

ஈரோடு  கிழக்கு இடைத்தேர்தலில் வரலாறு படைப்போம்: கே.ஏ. செங்கோட்டையன் 

DIN

ஈரோடு கிழக்குத் தொகுதி  இடைத்தேர்தலில் அதிமுக வரலாறு படைக்கும் என முன்னாள் அமைச்சர்  கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.

அதிமுக வேட்பாளர் கே. எஸ். தென்னரசுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்ததையடுத்து செவ்வாய்க்கிழமை முதல் தனது பிரசாரத்தை தொடங்கியுள்ளார். ஈரோடு மணல்மேட்டில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் பிரச்சாரம் நடந்தது. 

அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:

முதல் கட்ட தேர்தல் பிரசாரம் ஆலய வழிபாட்டோடு நடைபெற்று வருகிறது. தொடக்க நாளே குபேர மூலையில் பிரசாரம்  தொடங்கப்பட்டு உள்ளன. குபேர மூலை என்றாலே செல்வத்தை பெருக்குவதும் , வெற்றியை பெருகுவது ஆகும்.  

திண்டுக்கல்  இடைத்தேர்தல் போல்  ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றியை பெறுவோம். புதன்கிழமை வேட்பாளர் அறிமுக கூட்டம் பிரம்மாண்ட முறையில் நடைபெற உள்ளது.

அதிமுக வெற்றியை  யாராலும் தடுக்க முடியாது. இடைத்தேர்தலில் வரலாற்றை படைப்போம். இரட்டை இலை என்றாலே வெற்றி என்பார்கள்.   ஒற்றுமை உணர்வோடு பணியாற்றி  வருகிறோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

இன்ஸ்டா பக்கத்திலிருந்து வெளியேறியது ஏன்? - யுவன் விளக்கம்!

நாளை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

SCROLL FOR NEXT