தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என மு.க. ஸ்டாலினை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், வேளாண் துறையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் திமுக அரசு விவசாயிகளை வஞ்சிப்பதாக குற்றம் சாட்டினார்.
22 சதவிகிதம் ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு தமிழக பாஜக துணை நிற்கும் என உறுதி அளித்த அண்ணாமலை,
நெல் குவிண்டாலுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை ரூ. 2,500ஆக உயர்த்தப்படும் என்ற வாக்குறுதி என்னவானது? என கேள்வி எழுப்பினார்.