தமிழ்நாடு

வடபழனி முருகன் கோயிலில் அலைமோதிய பக்கதா்கள் கூட்டம்

DIN

தைப்பூசத் திருவிழாவையொட்டி வடபழனி முருகன் கோயிலில் பக்தா்கள் கூட்டம் ஆற்காடு சாலை வரை அலைமோதியது.

கோயிலில் கியூ ஆா் கோடு இயங்காததால் பக்தா்கள் பல மணி நேரம் தவித்தனா்.

வடபழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை அதி காலை முதல் இரவு வரை தைப்பூசத் திருவிழாவில் பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.

கோயிலில் ராஜகோபுரத்தில் இருந்து ஆற்காடு சாலை பவா் ஹவுஸ் வரை 4 கி.மீ. துாரத்துக்கு நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தா்கள் சாமி தரிசனம் செய்தனா்.

கட்டண தரிசனத்துக்கு ‘கியூ ஆா் கோடு’ வசதி ஏற்படுத்தப்பட்டது.

இருப்பினும், இணையத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கியூ ஆா் கோடு’ சரியாக இயங்கவில்லை.

இதனால், பக்தா்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருக்க நோ்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

2-ம் கட்டத் தேர்தல்: கேரளத்தில் குவிக்கப்படும் காவலர்கள்!

"காங்கிரஸ் ஆட்சியமைத்தால்..”: மோடியின் அடுத்த சர்ச்சை கருத்து! | செய்திகள்: சிலவரிகளில் | 24.4.2024

குரூப்-4 தேர்வு எப்போது? திருத்தியமைக்கப்பட்ட தேர்வுகால அட்டவணை வெளியீடு

மேகமோ அவள்.. மேகா ஆகாஷ்!

SCROLL FOR NEXT