தமிழ்நாடு

பட்டாசு - தீப்பெட்டித் தொழிலாளா்வாரியத்துக்கு ரூ.5 கோடி பங்களிப்பு நிதி

DIN

தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தொழிலாளா் நல வாரியத்துக்கு ரூ.5 கோடி பங்களிப்பு நிதி அளிக்கப்பட்டது. விருதுநகா் மாவட்ட பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளா் சங்கங்களின் பிரதிநிதிகள் இந்த நிதியை வழங்கினா்.

பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தித் தொழிலில் ஈடுபடும் அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை மாநில அரசு வழங்கி வருகிறது. தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும், தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளா் சங்கங்களின் பிரதிநிதிகள் ரூ.5 கோடி பங்களிப்பு நிதியை முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் சனிக்கிழமை அளித்தனா்.

இந்த நிகழ்வின் போது, தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் முகமது நசிமுத்தீன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT