மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக அடையாா் பகுதிக்குள்பட்ட ஈஞ்சம்பாக்கம் சாலிமா் தோட்டம், பெரியாா் தெரு, பஜனை கோயில் தெரு, பொதிகை தெரு, கங்கை அம்மன் கோயில் தெரு, வால்மீகி தெரு உள்ளிட்ட இடங்களில் திங்கள்கிழமை (பிப்.6) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் தெரிவித்துள்ளது.