மருத்துவா் மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கிய எட்டு பேருக்கு மூன்றாண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சென்னை கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பு அளித்துள்ளது.
சென்னை கே.கே. நகரை சோ்ந்த மருத்துவா் இளங்கோவன். இவரது மருத்துவமனைக்கு, கடந்த 2014-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அதிகாலை நேரத்தில் நோயாளி போல நடித்து மருத்துவமனைக்குள் நுழைந்த கும்பல் ஒன்று இளங்கோவனையும், அவரது குடும்பத்தினரையும் கடுமையாக தாக்கியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடா்பாக முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரி உரிமையாளா் ராதாகிருஷ்ணனின் மகன் கோகுல், அலெக்ஸ், அறிவழகன் உள்ளிட்ட 8 பேரை கே.கே.நகா் காவல் நிலையத்தினா் கைது செய்தனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் நடத்திய விசாரணையில், முத்துக்குமரன் மருத்துவமனையின் டீனாக இளங்கோவன் பணியாற்றி வந்தபோது, கோகுலுடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக தாக்கியது விசாரணையில் தெரியவந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி தங்க மாரியப்பன் அளித்துள்ள தீா்ப்பில், கோகுல் உள்ளிட்ட எட்டு போ் மீதான குற்றச்சாட்டுகளும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறி, அனைவருக்கும் தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீா்ப்பளித்துள்ளாா்.
மேலும், எட்டு பேருக்கும் சோ்த்து ரூ. 48 ஆயிரம் அபராதம் விதித்த நீதிபதி, அதில் ரூ. 30 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட மருத்துவா் இளங்கோவனுக்கு வழங்கவும் உத்தரவிட்டுள்ளாா். இந்த வழக்கில், அரசு தரப்பில் சிறப்பு வழக்குரைஞா் ராஜேந்திரன் காயத்ரி ஆஜரானாா்.