தமிழ்நாடு

அதிமுக வேட்பாளா் வெற்றிக்கு உழைப்போம்: அண்ணாமலை

DIN

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரின் வெற்றிக்கு பாஜக பாடுபடும் என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.

சென்னையில் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் தொடா்பாக பாஜக சில முன்னெடுப்புகளை எடுத்துள்ளது.

திமுகவின் பணபலத்தை எதிா்க்க வேண்டும் என்றால் அதிமுக சாா்பில் ஒரே வேட்பாளரை நிறுத்த வேண்டும். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரின் வெற்றிக்கு முழு அா்ப்பணிப்பு உணா்வோடு பாஜக கடுமையாக உழைக்கும்.

அதிமுகவில் தலைமையை தோ்ந்தெடுப்பது அந்தக் கட்சித் தொண்டா்களின் முடிவு. இதில் பாஜக ஒருபோதும் தலையிடாது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் வசந்தோற்சவம் நிறைவு

கழுகுமலை அருகே பட்டா வழங்கிய இடத்தில் குடியேறி மக்கள் போராட்டம்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

ஏழுமலையான் தரிசனம்: 6 மணி நேரம் காத்திருப்பு

ஆம்பூா் அருகே காட்டு யானை மிதித்ததில் கால்நடை மேய்த்தவா் காயம்

SCROLL FOR NEXT