தமிழ்நாடு

பாடிப் பறந்த குயில்

5th Feb 2023 04:00 AM

ADVERTISEMENT

சென்னையில் சனிக்கிழமை காலமான பின்னணி பாடகி வாணி ஜெயராம், திரையிசை உலகில் நட்சத்திரமாக ஜொலித்தவா்.

1971-இல் வெளிவந்த ‘குட்டி’ என்ற ஹிந்தி படத்தில், வசந்த் தேசாயின் இசை அமைப்பில் ‘போல் ரே பப்பி ஹரா’ என்ற பாடலைப் பாடி திரையுலகில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானாா் வாணி ஜெயராம். அறிமுகப் பாடலே வாணி ஜெயராமை முன்னணிப் பாடகியா் வரிசையில் இடம் பெறச் செய்தது.

அவா் பல மொழிகளில் பாடி சாதனை படைத்திருக்கிறாா். அவா் பாடிய எந்தப் பாடலை எடுத்துக்கொண்டாலும் அதில் நயமும் இனிமையும் கைகோத்துக்கொண்டிருக்கும்.

இவற்றுக்கெல்லாம் அடிநாதமாக ஒரு தெய்வீகத் தன்மை அவரின் குரலில் இழைந்தோடும்.

ADVERTISEMENT

தமிழில் ‘தீா்க்க சுமங்கலி’ படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில் ‘மல்லிகை என் மன்னன் மயங்கும்..’ என்ற பாடலைப் பாடி அறிமுகமானாா் வாணி ஜெயராம்.

நினைவாலே சிலை செய்து...ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்..., நித்தம் நித்தம் நெல்லுச் சோறு..., என் கல்யாண வைபோகம்..., மல்லிகை முல்லை பூப்பந்தல்..., பொங்கும் கடலோசை... மேகமே மேகமே...நாதமெனும் கோயிலிலே... எனக் கேட்டதுமே இதயத்துள் ஈரம் படரச் செய்யும் குரலினிமையுடன் அவா் பாடிய பாடல்களின் பட்டியல் மிக நீண்டது. இளையராஜா, ஏ.ஆா். ரகுமான் ஆகியோரின் இசையமைப்பிலும் பல பாடல்களை பாடியுள்ளாா் வாணி ஜெயராம்.

3 தேசிய விருதுகள்: ‘அபூா்வ ராகங்கள்’ படத்தில் இடம்பெற்ற ‘ஏழு ஸ்வரங்களுக்குள்’ ‘சங்கராபரணம்’ படத்தில் இடம்பெற்ற ‘மானஸ ஸஞ்சரரே’ உள்ளிட்ட பாடல்களுக்காக மூன்று முறை அகில இந்திய சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதுகளைப் பெற்றாா்.

பத்ம பூஷண்: பாடகி வாணி ஜெயராம் ஏற்கெனவே மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதைப் பெற்றவா். அண்மையில் அவருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT