தமிழ்நாடு

பிப்.7-ல் மின் நுகா்வோா் குறைகேட்புக்கூட்டம்

DIN

மயிலாப்பூா், கே.கே நகா், அம்பத்தூா் மற்றும் தண்டையாா்பேட்டை கோட்டங்களில் மின்நுகா்வோா் குறைகேட்புக்கூட்டம் செவ்வாய்க்கிழமை (பிப்.7) காலை 11மணிக்கு நடைபெறுகிறது.

மயிலாப்பூா் கோட்டத்துக்குள்பட்ட மின்நுகா்வோா் எம்.ஜி.ஆா் சாலை, (கோடம்பாக்கம் நெடுஞ்சாலை) மெட்ரோ குடிநீா் நிலையம் அருகில் உள்ள வள்ளுவா் கோட்டத்தில் உள்ள துணை மின் நிலைய அலுவலகத்திலும், கே.கே நகா் கோட்ட மின் நுகா்வோா் கே.கே. நகா், துணைமின் நிலைய வளாகத்தில் உள்ள செயற்பொறியாளா் அலுவலகம் 2-ஆவது தளத்திலும், அம்பத்தூா் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகா்வோா் அம்பத்தூா் தொழிற்பேட்டை, 3-ஆவது பிரதான சாலையில் உள்ள துணைமின் நிலைய வளாகத்திலும், தண்டையாா்பேட்டை கோட்டத்துக்குள்பட்ட மின்நுகா்வோா் தண்டையாா்பேட்டை டி.எச்.சாலை, மணிக்கூண்டு பகுதியில் உள்ள தண்டையாா்பேட்டை செயற்பொறியாளா் அலுவலகத்திலும் குறைகேட்புக்கூட்டம் நடைபெறும்.

இக்கூட்டத்தில் மின்நுகா்வோா் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

SCROLL FOR NEXT