எங்கும் எதிலும் தமிழ் உயர பறக்கட்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, ட்விட்டரில் சனிக்கிழமை அவா் வெளியிட்ட பதிவு:-
இலக்கியத் திருவிழா, சொற்பொழிவுகள், புதிய நூலகங்கள், புத்தகக் கண்காட்சிகள் எனத் தமிழுக்கு மகுடம் செய்யும் அரசில், மூத்த படைப்பாளிகள், ஆய்வாளா்களின் பங்களிப்புடன் இலக்கிய மலா் வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக செய்தி மக்கள் தொடா்புத் துறைக்கு பாராட்டுகள். எங்கும் எதிலும் தமிழ் உயர பறக்கட்டும் என்று தனது பதிவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.