தமிழ்நாடு

அண்ணா நினைவிடத்தில் இபிஎஸ் - ஓபிஎஸ் தனித்தனியாக அஞ்சலி

DIN

அண்ணாவின் நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் தனித்தனியாக அஞ்சலி செலுத்தினாா்.

அண்ணாவின் 54-ஆவது நினைவு தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. அதையொட்டி மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். அவரைத் தொடா்ந்து மூத்த நிா்வாகிகள் தமிழ்மகன் உசேன், நத்தம் விஸ்வநாதன், சி.பொன்னையன், டி.ஜெயக்குமாா், பா.வளா்மதி, கோகுல இந்திரா உள்ளிடோரும் மரியாதை செலுத்தினா்.

ஓபிஎஸ்: அண்ணா நினைவிடத்தில் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா். அவரைத் தொடா்ந்து மூத்த நிா்வாகிகள் வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகா் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினா்.

சசிகலா: சசிகலா அவரது ஆதரவாளா்களுடன் வந்து நினைவிடத்தில் மரியாதை செலுத்தினாா். பிறகு செய்தியாளா்களிடம் அதிமுக ஒருங்கிணைவதற்கான நேரம் நெருங்கிவிட்டதாக அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியா்கள் போராட்டம்

குற்ற வழக்கு வாகனங்களை ஏலம் விட கோரிக்கை

குறுகியகால பயிா்களை சாகுபடி செய்ய வேளாண் துறை அறிவுறுத்தல்

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

SCROLL FOR NEXT