மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1466 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் லேசான மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து 5 ஆவது நாளாக அதிகரித்து வருகிறது.
இதையும் படிக்க | 1083 காலி பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி!
சனிக்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.73 அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1454 கன அடியிலிருந்து 1466 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 69.76 டி.எம்.சியாக உள்ளது.