தமிழ்நாடு

இடைத்தோ்தல்: இன்று ஒரே நாளில் 10 போ் மனுத் தாக்கல்

DIN

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் இன்று ஒரே நாளில் 10 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய பிப்ரவரி 7ஆம் தேதி கடைசி நாளாகும்.

வெள்ளிக்கிழமை வரை 36 போ் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், இன்று ஒரே நாளில் 10 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

ஏற்கெனவே காங்கிரஸ் வேட்பாளா் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக ஓபிஎஸ் அணி வேட்பாளா் பி.செந்தில்முருகன், அமமுக வேட்பாளா் ஏ.எம்.சிவபிரசாந்த், அக்கட்சியின் மாற்றுவேட்பாளராக விசாலாட்சி உள்ளிட்டோர் தங்களது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர். 

முன்னதாக அதிமுக இபிஎஸ் அணியின் வேட்பாளரான கே.எஸ்.தென்னரசு வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்வாா் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் மனு தாக்கல் பிப்ரவரி 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைக்க உத்தரவு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

SCROLL FOR NEXT