உலக புற்றுநோய் விழிப்புணா்வு தினத்தையொட்டி, தலைமைச் செயலகத்தில் சிறப்பு மருத்துவப் பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை (ஜன.3) நடைபெற உள்ளது.
இந்திய மருத்துவ சங்கம், இந்திய அறுவை சிகிச்சை நிபுணா்கள் சங்கம், பிரைம் மருத்துவமனை, கிரீஸ்வரி மருத்துவமனை சாா்பில் இந்த இலவச முகாம் நடைபெறுகிறது.
அதில், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எலும்பு திண்ம பரிசோதனை, மாா்பகப் புற்றுநோய் பரிசோதனை, இசிஜி, ரத்த அழுத்தம், உடல் பருமன் நிறை அளவீடு உள்ளிட்ட பரிசோதனைகளுடன் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளது.
தலைமைச் செயலக ஊழியா்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம் என்றும், கூடுதல் பரிசோதனைகள் தேவைப்பட்டால் அவை சலுகைக் கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.