தமிழ்நாடு

இபிஎஸ்-ஓபிஎஸ் இணைந்து செயல்பட வலியுறுத்தினோம்: அண்ணாமலை பேட்டி

DIN

பாஜகவின் நிலைப்பாடு குறித்து கேள்விக்கு வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு 7ம் தேதி வரை நேரம் இருப்பதால் அதுவரை காத்திருக்குமாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி கூட்டாக அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல் ஒன்றிணைந்த அதிமுக வேட்பாளரே போட்டியிட வேண்டும் என பாஜக விரும்புகிறது. ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரை இணைக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.

அகில இந்திய பாஜக பொதுச் செயலாளர் ரவி மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.
 
இன்று காலை அதிமுக இடைக்கால பொது செயலாளரும் எதிர்கட்சி சட்டமன்ற தலைவருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை நேரில் சந்தித்தோம்.

1972 இல் அதிமுக உருவாகும் போது அதனை உருவாக்கிய கட்சி தலைவரான எம்ஜிஆர் திமுகவை ஒரு தீய சக்தி என குறிப்பிட்டார். அது தற்போது வரை அதே நிலையில் தான் உள்ளது. ஜெயலலிதாவும் திமுகவை தீய சக்தி என்று தான் குற்றம் சாட்டியுள்ளார். மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் செல்வாக்கு குறைந்து வருகிறது. 

இதற்கு காரணம் ஊழல், திமுகவினர் ஒரு குடும்ப வளர்ச்சிக்காகவே உழைப்பது, மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு பால் விலை உயர்வு, மேலும் கட்டப்பஞ்சாயத்து பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்திருப்பதாக குற்றம் சாட்டினார்.

திமுக எம்பிக்கள் மற்றும் அமைச்சர்கள் நிர்வாகிகள் தொடர்ந்து தமிழ் கலாசாரத்திற்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருவதாக குற்றம் சாட்டினார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தலை பொருத்தவரை ஓபிஎஸ் இபிஎஸ் ஆகிய இரு தரப்பையும் இணைக்கும்  முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். திமுகவை வீழ்த்த ஒன்றிணைந்த தேசிய ஜனநாயக கூட்டணியால் மட்டுமே முடியும் அதற்கு ஒன்றிணைந்த அதிமுக அவசியம். திமுகவை எதிர்த்து போட்டியிட ஒரு உறுதியான வேட்பாளர் வேண்டும் அதற்கு அதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் ஒன்றிணைய வேண்டும் இதனை தாங்கள் நேரில் வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.

தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு குறித்து கேள்விக்கு வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு 7ம் தேதி வரை நேரம் இருப்பதால் அதுவரை காத்திருக்குமாறு செய்தியாளர்களிடம் பாஜக தேசிய பொதுச் செயலாளர் ரவி மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழல் புகைத் திரை உருவாக்கம் கேஜரிவால் உருக்கமான வாதம்

எம்சிடி நிதி நிலை: உயா்நீதிமன்றம் அதிருப்தி

பிஎம்எல்ஏ வழக்கு விவகாரம்: கேஜரிவாலின் காவல் ஏப்ரல் 1 வரை நீட்டிப்பு

மெட்ரோ ரயில் நிலைய தூணில் காலிஸ்தான் ஆதரவு வாசகம்: போலீஸாா் விசாரணை

மக்கள் மீது அக்கறை இருந்தால் கேஜரிவால் பதவி விலக வேண்டும்: தில்லி பாஜக

SCROLL FOR NEXT