மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கிணற்றில் குதிக்கும் விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடைப்பயிற்சி, மாரதான் ஓட்டம் போன்றவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அரசு நிகழ்ச்சிகளுக்காக வெளியூர்களில் தங்கும்போது காலை நேரங்களில் அப்பகுதிகளில் நடைப்பயணம் மேற்கொண்டு காணொலிகளை பகிர்ந்து உடற்பயிற்சி குறித்து விழிப்புணர்வு பதிவை வெளியிடுவார்.
அந்த வகையில், ஈரோடு சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் கிணற்றில் குளிக்கும் காணொலியை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
அதில், தினந்தோறும் குளியலறையில் 2 குடம் தண்ணீரில் குளிக்கும் வழக்கத்திலிருந்து சற்று மாறுபட்டு இன்று காலை மகிழ்ச்சிகரமான கிராம குளியல் எனப் பதிவிட்டுள்ளார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பகிர்ந்துள்ள இந்த காணொலி தற்போது சமூக ஊடகங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது.