முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக் காட்டில் புலி தாக்கியதில் பெண் பலியான சம்பவம் நடந்துள்ளது.
வீட்டருகே உள்ள காட்டிற்கு நேற்று மாரி (50) சென்ற பெண் இரவு வீடு திரும்பவில்லை. உறவினர்கள் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இன்று காலையில் மீண்டும் தேடியுள்ளனர். புலி தாக்கி உடல் சிதைந்த நிலையில் சடலம் கிடந்துள்ளது.
இதையும் படிக்க: பட்ஜெட் 2023: இதுதான் நடுத்தர மக்களுக்கான சலுகையா?
இந்நிலையில் வனத் துறையும், காவல் துறையினரும் உடற்கூறு பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு சடலத்தைக் கொண்டு சென்றுள்ளனர்.