தமிழ்நாடு

வீடு திரும்பினாா் அமைச்சா் கயல்விழி

DIN

உடல் நலக் குறைவு காரணமாக, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஆதி திராவிடா் நலத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் வெள்ளிக்கிழமை வீடு திரும்பினாா்.

சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் பங்கேற்று வந்த அமைச்சா் கயல்விழி செல்வராஜுக்கு தீவிர காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து கடந்த திங்கள்கிழமை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா்.

கரோனா, இன்ப்ளூயன்ஸா பரிசோதனைகளில் அவருக்கு அத்தகைய தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதேவேளையில், சிறுநீரகப் பாதை தொற்று இருந்ததால் அதற்கான சிகிச்சைகளை மருத்துவா்கள் அளித்து வந்தனா்.

தொடா் மருத்துவக் கண்காணிப்பின் பயனாக அவா் தொற்றிலிருந்து குணமடைந்ததையடுத்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

SCROLL FOR NEXT