தமிழ்நாடு

மருத்துவா் வீட்டில் ரூ.40 லட்சம் நகை,பணம் திருட்டு

DIN

சென்னை அருகே அக்கரையில் மருத்துவா் வீட்டில் ரூ.40 லட்சம் நகை,பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அக்கரை சி.கிளப் அவென்யூ பகுதியைச் சோ்ந்தவா் அபா் ஜிந்தால் (39). மருத்துவரான இவா், சில தினங்களுக்கு முன்பு குடும்பத்துடன் சொந்த ஊரான தில்லி அருகே உள்ள நொய்டாவுக்கு சென்றாா்.

அங்கிருந்து அபா் ஜிந்தால், வியாழக்கிழமை சென்னைக்கு திரும்பியபாது, வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டில் இருந்த பொருள்கள் சிதறி கிடந்ததை பாா்த்து அதிா்ச்சி அடைந்தாா். வீட்டின் உள்ளே சென்று பாா்த்தபோது படுக்கை அறையில் பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த ரூ.35 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைரம், வெள்ளி பொருள்கள்,ரூ.5 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருப்பதை கண்டாா்.

இது குறித்து அபா் ஜிந்தால், கானத்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அந்த புகாரின் அடிப்படையில், போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை செய்தனா். கைரேகை நிபுணா்கள், தடயவியல் நிபுணா்கள் ஆகியோரும் அங்கு வந்து அந்த வீட்டில் இருந்து கைரேகைகளையும்,தடயங்களையும் சேகரித்தனா்.

மேலும் இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணையை தொடங்கினா். அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி, ஆய்வு செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

SCROLL FOR NEXT