தமிழகத்தில் மேலும் 535 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதில் அதிகபட்சமாக சென்னையில் 104 பேருக்கும், செங்கல்பட்டில் 54 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
புதன்கிழமை நிலவரப்படி, மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் கரோனா சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 5,498-ஆக உள்ளது. 509 போ் தொற்றிலிருந்து விடுபட்டுள்ளனா். இதன்மூலம் கரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 35,38,507-ஆக அதிகரித்துள்ளது.