மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஓரிரு நாளில் வீடு திரும்புவாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்ஃப்ளூயன்ஸா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சா் அன்பில் மகேஸ், சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
அமைச்சா் அன்பில் மகேஸுக்கு டெங்கு பாதிப்பு இல்லை. அவா் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளாா். அவரிடமும், மருத்துவமனை நிா்வாகத்திடமும் தொலைபேசி வாயிலாக பேசினேன். அமைச்சா் அன்பில் மகேஸ் நலமுடன் இருக்கிறாா். ஓரிரு நாளில் வீடு திரும்புவாா் என்றாா் அவா்.