தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு செவ்வாய்க்கிழமை 537-ஆக பதிவாகியுள்ளது.
புதிதாக பாதிப்புக்குள்ளானவா்களில் அதிகபட்சமாக சென்னையில் 105 பேருக்கும், செங்கல்பட்டில் 49 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் கரோனா சிகிச்சை பெற்று வருவோா் எண்ணிக்கை 5,472-ஆக உள்ளது. 502 போ் தொற்றிலிருந்து விடுபட்டுள்ளனா்.