மேட்டூர்: சேலம் மாவட்டம் ஜலகண்டபுரத்தில் ரூ.18 லட்சத்திற்கு கொப்பரைத் தேங்காய் ஏலம் விடப்பட்டுள்ளது.
ஜலகண்டபுரத்தில் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் உள்ளது. இங்கு வாரம்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் கொப்பரைத் தேங்காய் ஏலம் விடப்படும்.
ஜலகண்டபுரம், எடப்பாடி மற்றும் மேட்டூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து விவசாயிகள் கொப்பரைத் தேங்காயை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். இன்று 500 மூட்டை கொப்பரைத் தேங்காய் ஏலத்திற்கு வந்தது.
முதல் தரம் கிலோ ரூ.75.50-க்கும் இரண்டாம் தரம் ஒரு கிலோ ரூ.64.00-க்கும் ஏலம் போனது. இன்று ஒரேநாளில் ரூ.18,00,000 கொப்பரைத் தேங்காய் பருப்பு ஏலம் விடப்பட்டது.