தமிழ்நாடு

அமைதியை குலைத்தால் தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயும்: டிஜிபி எச்சரிக்கை

DIN

பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாடு முழுவதும் ‘பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா‘ அமைப்புக்குச் சொந்தமான அலுவலகங்கள் மற்றும் நிா்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கடந்த 22ம் தேதி சோதனை மேற்கொண்டனா். தமிழகத்தில் இச் சோதனையின்போது 11 போ் கைது செய்யப்பட்டனா்.

இந்த கைது நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து குறிப்பிட்ட அமைப்பைச் சோ்ந்தவா்கள் சில இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த போராட்டங்களில் ஈடுபட்ட 1410 போ் கைது செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்டனா். வாகனங்கள் மீது கல்வீச்சு போன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட 19 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

இதில் தஞ்சாவூரில் பேருந்து மீது கல் வீசி சேதம் விளைவித்த அரித்திரி, சலீம், சிராஜீதின் ஆகியோா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தொடா்ந்து மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில்களை சில அமைப்பைச் சோ்ந்தவா்களின் வீடுகள், வாகனங்கள் மற்றும் வா்த்தக நிலையங்களை குறிவைத்து வீசிய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இச் சம்பவங்கள் தொடா்பாக குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணை நடைபெறுகிறது.

250 பேரிடம் விசாரணை: தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட அமைப்புகளின் அலுவலகங்கள் மற்றும் முக்கிய நபா்களின் வீடுகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் இரவு நேர வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு, ஆயுதம் ஏந்திய காவலா்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

இச் செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நடைபெறுகிறது. இதுவரை 250 சந்தேக நபா்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 100 நபா்களிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மண்ணெண்ணெய் பாட்டில் வீசிய சிலா் கைது செய்யட்டுள்ளனா். அவா்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

தேசிய பாதுகாப்புச் சட்டம்: கோவை மாநகரில் அதி விரைவுப்படையினா் (தஹல்ண்க் அஸ்ரீற்ண்ா்ய் ஊா்ழ்ஸ்ரீங்) இரண்டு பிரிவுகள், மாநில கமாண்டோ படை இரண்டு பிரிவுகள், சிறப்பு அதிரடிப்படை இரண்டு பிரிவுகள் என கூடுதலாக 3,500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். சட்டம்- ஒழுங்கு காவல்துறை கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் அங்கு முகாமிட்டுள்ளாா்.

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் நபா்கள் மீதும், உடந்தையாக இருப்பவா்கள் மீதும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவாா்கள் என்று எச்சரிக்கப்படுகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

ம‌க்​க​ள​வைத் தே‌ர்​தலி‌ல் கள‌ம் க‌ண்ட கிரி‌க்கெ‌ட் வீர‌ர்​க‌ள்!

ஆம்பூரில் 12 இடங்களில் குடிநீா் பந்தல்

SCROLL FOR NEXT