தமிழ்நாடு

தமிழக அமைச்சரவைக் கூட்டம் நிறைவு!

DIN

தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நிறைவடைந்துள்ளது.

இணைய சூதாட்டத்துக்குத் தடை விதிப்பது குறித்தும், ஜெயலலிதா மரணம் தொடா்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையை பேரவையில் விவாதத்துக்கு வைப்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆளுநரிடம் நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்கள், பேரவையில் நிறைவேற்றப்பட வேண்டிய புதிய சட்ட மசோதாக்கள், புதிய திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பரந்தூா் புதிய விமான நிலைய நில எடுப்பு விவகாரம் மற்றும் இணைய சூதாட்டத்துக்குத் தடை விதிப்பு குறித்தும் அமைச்சா்களுடன் முதல்வா் ஆலோசித்தாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல பொலிவுறு நகரத் திட்ட முறைகேடு தொடா்பான விசாரணை அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம் தொடா்பான விசாரணை அறிக்கை ஆகியவற்றை பேரவைக் கூட்டத்தில் வைப்பது குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

SCROLL FOR NEXT