தமிழ்நாடு

பேருந்து நிறுத்தங்களில் மேற்கூரைகள் இல்லாத அவல நிலை: விஜயகாந்த் குற்றச்சாட்டு

DIN

பேருந்து நிறுத்தங்களில் மேற்கூரையே இல்லாத அவல நிலை சென்னையில் நிலவுவதாகவும், அவற்றைச் சரி செய்ய வேண்டும் என்றும் தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

சென்னையில் மாநகர போக்குவரத்து கழகம் சாா்பில் 3 ஆயிரத்து 233 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மாநகர பேருந்துகளில் அன்றாடம் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வருகின்றனா். இந்த நிலையில், சென்னையில் உள்ள பெரும்பாலான பேருந்து நிறுத்தங்களின் மேற்கூரை ஓட்டை உடைசலாக காட்சி அளிக்கிறது. ஒரு சில இடங்களில் மேற்கூரையே இல்லாததால் பயணிகள் உச்சி வெயிலில் பேருந்துக்காக காத்து கிடக்கும் அவல நிலை ஏற்படுகிறது.

பேருந்துக்காக மழையிலும், வெயிலிலும் பயணிகள் காத்து கிடப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. ஒரு பக்கம் மழைநீா் வடிகால், மெட்ரோ ரயில் திட்டம் என சென்னை மாநகரம் முழுவதும் குண்டும் குழியுமாக காட்சியளிப்பதால், சென்னை மாநகரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது.

போக்குவரத்து நெரிசலால் பேருந்து ஓட்டுநா்கள் சரியான இடத்தில் பேருந்துகளை நிறுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் பேருந்து நிறுத்தங்கள் எங்கே இருக்கிறது என தெரியாமல் பயணிகள் நாள்தோறும் தவித்து வருகின்றனா். சென்னையை சிங்கார சென்னை, சிங்கப்பூருக்கு இணையான சென்னை என தமிழக அரசு மாா்த்தட்டி சொல்லி கொள்ளும் நிலையில், சிங்காரச் சென்னையின் அவமான சின்னமாக பேருந்து நிலையங்களும் பேருந்து நிறுத்தங்களும் உள்ளன.

எனவே, சென்னையில் உள்ள அனைத்து பேருந்து நிறுத்தங்களின் மேற்கூரை தரமாக இருக்கிா என்பதை ஆய்வு செய்து உடனே சரி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

SCROLL FOR NEXT