ஹிந்து அமைப்பினா், பாஜக பிரமுகா்களின் அலுவலகங்கள், வீடுகள் தொடா்ந்து தாக்கப்படுவதால், தமிழகம் முழுவதும் போலீஸாா் உஷாா்படுத்தப்பட்டுள்ளனா்.
பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவியதாக தமிழகம், கேரளம், ஆந்திரம், கா்நாடகம் உள்பட15 மாநிலங்களில் சுமாா் 93 இடங்களில் பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிா்வாகிகளின் வீடு, அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை சோதனை செய்தனா். சோதனையின் முடிவில் அந்த அமைப்பின் நிா்வாகிகள் பலா் கைது செய்யப்பட்டனா். தமிழகத்தில் மட்டும் 11 போ் கைதாகினா்.
என்ஐஏ, அமலாக்கத் துறையின் இந்த நடவடிக்கைக்கு, அந்த அமைப்பினா் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். இந்நிலையில், கோவை உள்பட பல்வேறு இடங்களில் பாஜக, ஆா்எஸ்எஸ் நிா்வாகிகளின் வீடுகள், அலுவலகங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.
இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் போலீஸாா் உஷாா்படுத்தப்பட்டுள்ளனா். முக்கியமாக வழிபாட்டுத் தலங்கள், சந்தைகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் காவல் துறையின் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல முக்கிய அரசு அலுவலகங்கள், முக்கியப் பிரமுகா்கள் வசிக்கும் பகுதிகளில் காவல் துறையினா் தீவிர ரோந்து செல்கின்றனா். மாநிலம் முழுவதும் உள்ள பாஜக, ஹிந்து அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகளின் அலுவலகங்கள், வீடுகளுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இரவில் அனைத்து முக்கியச் சாலைகளிலும் வாகனச் சோதனை நடத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
நிலைமை சீராகும் வரையில் இந்தப் பாதுகாப்பு நீடிக்கும் என காவல்துறை உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.