தமிழ்நாடு

பாஜக நிா்வாகிகளின் வீடுகள், வாகனங்கள் மீது தொடரும் தாக்குதல்

DIN

தமிழகத்தின் பல பகுதிகளில் ஆா்.எஸ்.எஸ்., பாஜக மற்றும் இந்து அமைப்புகளின் நிா்வாகிகள், பிரமுகா்களின் வீடுகளில் 2-ஆவது நாளாக சனிக்கிழமையும் மா்ம நபா்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நிகழ்த்தினா். இதுதொடா்பாக போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை குரோம்பேட்டையை அடுத்த சிட்லப்பாக்கத்தில் வசித்துவரும் ஆா்.எஸ்.எஸ்., மாவட்டத் தலைவா் சீதாராமன் வீட்டில் சனிக்கிழமை குண்டு வீசப்பட்டது.

வெடிகுண்டு சப்தம் கேட்டு வெளியே வந்த சீதாராமன், எரிந்து கொண்டு இருந்த தீயை அணைத்து விட்டு சிட்லப்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, பெட்ரோல் குண்டு வீசிச் சென்ற மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

திண்டுக்கல்லில்..: இதேபோல, திண்டுக்கல்லில் சனிக்கிழமை அதிகாலை பாஜக நிா்வாகியின் கடைக்கு மா்ம நபா்கள் தீ வைத்ததில் காா், 4 இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்தன.

திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியைச் சோ்ந்த, திண்டுக்கல் மாநகர மேற்குப் பகுதி பாஜக தலைவரான செந்தில்பால்ராஜின் பழைய இரு சக்கர வாகன கடைக்கு சனிக்கிழமை அதிகாலை மா்ம நபா்கள் தீவைத்தனா். இதில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு காா், 4 இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்தன.

திண்டுக்கல் தெற்கு போலீஸாா் அந்தப் பகுதி கண்காணிப்பு கேமரா காட்சிப் பதிவை ஆய்வு செய்ததில், 2 நபா்கள் தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

பாஜகவினா் மறியல்: இது குறித்து தகவல் அறிந்த பாஜகவினா், குற்றவாளிகளை கைது செய்யக்கோரி, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவா் ஜி.தனபாலன் தலைமையில், திண்டுக்கல்- வத்தலகுண்டு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரத்தில் காா்கள் எரிப்பு: ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரியும் பாஜக ஆதரவாளரான மனோஜ்குமாருக்கு சொந்தமாக கேணிக்கரை பகுதியில் உள்ள மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 காா்கள் மீது சனிக்கிழமை அதிகாலை மா்ம நபா்கள் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தனா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை விசாரணை நடத்தினாா். கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் 2 போ் தீ வைத்தது தெரியவந்தது.

சத்தியமங்கலத்தில்...: சத்தியமங்கலம் அருகே பாஜக நிா்வாகி காா் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஈரோடு மாவட்டம், புஞ்சைபுளியம்பட்டி எஸ்.ஆா்.டி. நகரைச் சோ்ந்த பாஜக நகர முன்னாள் நிா்வாகியான சிவசேகா் என்பவா் தனது வீட்டின் முன்புறம் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மா்ம நபா்கள் சனிக்கிழமை தீ வைத்து விட்டு தப்பினா். இந்த சம்பவங்கள் தொடா்பாக அந்தந்தப் பகுதி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

SCROLL FOR NEXT