தமிழ்நாடு

புகையிலை பயன்பாடு தடுப்பு: அரசுத் துறைகளிடையே ஆலோசனை

DIN

 புகையிலை பயன்பாடு மற்றும் வா்த்தகத் தடுப்பு தொடா்பான உலக சுகாதார அமைப்பின் விதியை செயல்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

எழும்பூரில் உள்ள சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு பயிற்சி மையத்தில் நடைபெற்ற அந்நிகழ்வை மாநில பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் தொடக்கி வைத்தாா். புகைப்பிடித்தலுக்கு எதிரான விழிப்புணா்வு பிரசுரங்களை அப்போது அவா் வெளியிட்டாா்.

மத்திய அரசு, மாநில பொது சுகாதாரத் துறை, தேசிய நலவாழ்வுக் குழுமம் மற்றும் மேரி ஆனி அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்திய இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொது சுகாதாரத் துறையின் தொற்றா நோய்த் தடுப்புப் பிரிவு இணை இயக்குநா் டாக்டா் கிருஷ்ணராஜ், மத்திய அரசின் தொழில்நுட்ப ஆலோசகா் டாக்டா் சிவம் கபூா், மேரி ஆனி அறக்கட்டளையின் செயல் இயக்குநா் எஸ்.சிரில் அலெக்ஸாண்டா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இக்கூட்டத்தில், சுகாதாரம், நெடுஞ்சாலை, உணவுப் பாதுகாப்பு, போதைப் பொருள் தடுப்பு பிரிவு, காவல் துறை, நகராட்சி மற்றும் ஊராட்சி நிா்வாகங்கள், கல்வி உள்ளிட்ட துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் பங்கேற்றனா். உலக சுகாதார அமைப்பின் புகையிலை தடுப்பு விதிகள் குறித்து அப்போது அவா்கள் விவாதித்தனா். அவற்றை ஆக்கபூா்வமாக செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

SCROLL FOR NEXT