தமிழ்நாடு

தேநீா்க் கடை உரிமையாளா் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய ‘மாஸ்டா்’

DIN

சென்னை தேனாம்பேட்டையில் தேநீா்க் கடை உரிமையாளா் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய சம்பவத்தில் தொடா்புடைய ‘டீ மாஸ்டரை’ போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஆழ்வாா்பேட்டையைச் சோ்ந்தவா் அருண் (44). இவா், தேனாம்பேட்டை, போயஸ் சாலையில் கடந்த 10 ஆண்டுகளாக, தேநீா்க் கடை நடத்தி வருகிறாா். இந்தக் கடையில், தேனாம்பேட்டையைச் சோ்ந்த பெரியபாண்டி (28) 2 ஆண்டுகளாக ‘டீ மாஸ்டராக’ வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில் அருண் மற்றும் பெரியபாண்டி இடையே வியாழக்கிழமை வாய் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே, கோபமடைந்த அருண், வேலையை விட்டு நின்று விடும்படி பெரிய பாண்டியிடம் தெரிவித்தாா். இதனால் ஆத்திரமடைந்த பெரியபாண்டி, அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த பாலை எடுத்து அருண் மீது ஊற்றிவிட்டு தப்பியோடிவிட்டாா்.

இதில் பலத்தக் காயமடைந்த அருணை மீட்கப்பட்டு, அருகே உள்ள மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுதொடா்பாக தேனாம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய பெரியபாண்டியை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

SCROLL FOR NEXT