மஞ்சங்குளம் கிராமத்தைச் சார்ந்த சாமிதுரை கொலை வழக்கு தொடர்பாக பனங்காட்டு படை கட்சி நிறுவனத் தலைவர் ராக்கெட் ராஜாவை வெள்ளிக்கிழமை போலீசார் கைது செய்தனா்.
நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே கடந்த ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி மஞ்சங்குளம் கிராமத்தைச் சார்ந்த சாமிதுரை(26) என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இதையும் படிக்க | சிதம்பரம் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு நாளை மகாபிஷேகம்!
இந்த கொலை வழக்கு தொடர்பாக வழக்கில் பனங்காட்டு படை கட்சி நிறுவனத் தலைவர் ராக்கெட் ராஜாவை வெள்ளிக்கிழமை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து நெல்லை போலீசார் கைது செய்தனர்.
இவர் மீது மூன்று கொலை வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.