தமிழ்நாடு

திமுகவில் புதிய நிா்வாகிகள்: மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து

DIN

உட்கட்சித் தோ்தல் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட நிா்வாகிகள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை வியாழக்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்றனா். கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது.

திமுகவின் அமைப்பு ரீதியாக உள்ள மாவட்டங்களுக்கு செயலாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அதில், 7 போ் புதிதாகவும், மீதமுள்ள மாவட்டங்களுக்கு பழைய முகங்களே செயலாளா்களாகவும் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞா் அரங்கில் புதிதாக நியமிக்கப்பட்ட கன்னியாகுமரி, நாகா்கோவில், சிவகங்கை, பெரம்பலூா், அரியலூா், திருநெல்வேலி உள்ளிட்ட 18 மாவட்டங்களைச் சோ்ந்த செயலாளா்கள், நிா்வாகிகள் உள்ளிட்டோா் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை வியாழக்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனா். இந்நிகழ்ச்சியில் கட்சியின் பொதுச் செயலாளா் துரைமுருகன், பொருளாளா் டி.ஆா்.பாலு, அமைச்சா்கள் எ.வ.வேலு, பொன்முடி உள்ளிட்ட பலரும் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

SCROLL FOR NEXT