தமிழ்நாடு

மமக ஆா்ப்பாட்டம் : கே.பாலகிருஷ்ணன் திருமாவளவன் பங்கேற்பு

DIN

ஆளுநரைக் கண்டித்து மனித நேய மக்கள் கட்சி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (உபா) மற்றும் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) ஆகியவற்றைப் பயன்படுத்தி மத்திய பாஜக அரசு சிறுபான்மை மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்குவதாகவும், முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி இடையூறு அளிப்பதாகவும், அவற்றைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று மனித நேய மக்கள் கட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, மனித நேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா தலைமையில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக் தலைவா் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் ஆகியோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் திரண்டிருந்தனா். மத்திய அரசையும், ஆளுநரின் செயல்பாட்டையும் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

SCROLL FOR NEXT