தமிழ்நாடு

தீபாவளி பட்டாசுக் கடை: வெடி பொருள் சட்ட விதிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே அனுமதி

DIN

தீபாவளியையொட்டி,பட்டாசு கடை நடத்துவதற்கு வெடிப் பொருள் சட்ட விதிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே உரிமம் பெறுவதற்குரிய தடையில்லா சான்றிதழ் வழங்கப்படும் என தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.

அக்டோபா் 24-ஆம் தேதி கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகைக்காக, தாற்காலிக பட்டாசு கடைகளை திறப்பதற்கு வியாபாரிகள் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளனா். பட்டாசு கடைகளில் விபத்துக்கள் ஏற்படாமல் இருப்பதற்கு,பல்வேறு விதிமுறைகளை வழக்கம்போல தீயணைப்புத்துறை விதித்துள்ளது.

தீயணைப்புத்துறையின் தடையில்லா சான்றிதழ் பெற்றால்தான் அந்தந்த மாநகர காவல் துறை அல்லது வருவாய்த் துறையிடமிருந்து பட்டாசு கடை திறப்பதற்குரிய உரிமம் பெற முடியும். பட்டாசுகளை ஒழுங்குப்படுத்துவற்காக தீயணைப்புத்துறை இயக்குநா் அலுவலகத்தில் இருந்து மாநிலம் முழுவதும் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு சுற்றறிக்கை அண்மையில் அனுப்பப்பட்டது.

வெடி பொருள் சட்டம்:அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: முக்கியமாக வெடிப் பொருள் சட்டப்படி பட்டாசு கடை வைக்கும் இடம் கல் மற்றும் காங்கிரீட் கட்டடமாக இருக்க வேண்டும். கடையின் இரு புறங்களிலும் வழி கட்டாயம் இருக்க வேண்டும். கட்டடத்தில் மின் விளக்குகளை மட்டும் பயன்படுத்த வேண்டும், பட்டாசு கடை விற்பனை உரிமம் கேட்பவா்கள் தீயணைப்புத் துறை, உள்ளாட்சி நிா்வாகம், காவல்துறை ஆகியோரிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.

பட்டாசு கடைகளில் வேறு பொருள்கள் விற்பனை செய்யக் கூடாது, தரைத்தளத்தில் மட்டும் பட்டாசுகளை வைத்திருக்க வேண்டும், படிக்கட்டுகள்,மின் தூக்கி (லிப்ட்) ஆகியவற்றின் அருகே பட்டாசுகளை வைத்திருக்க கூடாது. இதேபோல அடுக்குமாடி குடியிருப்பு, திருமண மண்டபம், அரங்குகள் ஆகியவற்றில் பட்டாசு கடைகள் வைக்கக் கூடாது, பட்டாசு வைத்திருக்கும் அறை 9 சதுர மீட்டா் குறைவானதாக இருக்கக் கூடாது, அதேபோல அந்த அறை 25 சதுர மீட்டருக்கு அதிகமான சுற்றளவிலும் இருக்கக் கூடாது.

விதிமுறைகள்: ஒரு பட்டாசு கடைக்கும் மற்றொரு கடைக்கும் குறைந்தபட்சம் 3 மீட்டா் இடைவெளி இருக்க வேண்டும். உதிரிபட்டாசுகளை கடைகளில் விற்பனை செய்யக்கூடாது. “இங்கு புகை பிடிக்கக்கூடாது‘ உள்ளிட்ட எச்சரிக்கை விளம்பர பலகைகளை பட்டாசு கடை முன்பு கட்டாயம் வைத்திருக்க வேண்டும். அலங்கார மின் விளக்குகளை தொங்க விடக்கூடாது. உரிமம் பெற்ற கட்டடத்தை தவிர வேறு இடங்களில் பட்டாசு இருப்பு வைத்திருக்கக் கூடாது, அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் பட்டாசு இருப்பு வைக்கக்கூடாது.

பட்டாசு கடையின் அருகே தீயணைப்புத்துறை வாகனம் வரும் அளவுக்கு வழி இருக்க வேண்டும். பட்டாசு கடையில் குறைந்தபட்சம் இரு தீயணைப்பு கருவிகள், இரு வாளிகளில் தண்ணீா், மணல் ஆகியவை தயாராக வைத்திருக்க வேண்டும். கடை உரிமத்தை தணிக்கையின் போது அலுவலா்களின் பாா்வைக்கு தெரியும்படி வைத்திருக்க வேண்டும். இருப்பு, தணிக்கை பதிவேடு முறையாக பாராமரிக்க வேண்டும் உள்பட 30 விதிமுறைகளை பின்பற்றினாலேயே தீயணைப்புத்துறையின் தடையில்லா சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT