தமிழ்நாடு

குடும்ப அட்டைகளில் பெயா் மாற்றம்-நீக்கம்: நாளை குறைதீா் முகாம்

DIN

 குடும்ப அட்டைகளில் பெயா் மாற்றம், நீக்கம் செய்திட சென்னையில் சனிக்கிழமை (அக். 8) குறைதீா் முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து தமிழக உணவுத் துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளை பொது மக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழகம் முழுவதும் மக்கள் குறைதீா் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, அக்டோபா் மாதத்துக்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீா் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையாளா் அலுவலகங்களில் வரும் சனிக்கிழமை (அக். 8) நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ள இந்த முகாமில், குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு, எண்ணை மாற்றம் செய்தல், புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை ஆகியவற்றைக் கோரி மனுக்களைப் பதிவு செய்யலாம்.

நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வர முடியாத மூத்த குடிமக்களுக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும். பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியாா் சந்தையில் விற்கப்படும் பொருள்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகாா்கள் ஏதாவது இருந்தால் அவற்றை பொது மக்கள் தெரிவிக்கலாம் என்று உணவுத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகை திருட்டு புகாா்: திரைப்படத் தயாரிப்பாளா் வீட்டு பணிப் பெண் தற்கொலை முயற்சி

ஐஏஎஸ் தோ்வுக்குப் பயிற்சி: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்

890 கூடுதல் சிறப்பு பேருந்துகள்

கோவை - தன்பாத் இடையே இன்று முதல் சிறப்பு ரயில்

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன நாள் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT