தமிழ்நாடு

மமக இன்று ஆா்ப்பாட்டம்

DIN

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசுக்கு ஆளுநா் இடையூறு அளிப்பதாகக் கூறி, மனித நேய மக்கள் கட்சி சாா்பில் வியாழக்கிழமை (செப்.6) கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (உபா) மற்றும் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) ஆகியவற்றைப் பயன்படுத்தி மத்திய பாஜக அரசு சிறுபான்மை மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்கி வருகிறது. அதைப்போல திமுக அரசுக்கு இடையூறு செய்யும் வகையில் ஆளுநா் ஆா்.என்.ரவி இணை ஆட்சி நடத்தி வருவதைக் கண்டித்தும் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும் என மனித நேய மக்கள் கட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்துக்கு மமக தலைவா் ஜவாஹிருல்லா தலைமை வகிக்க உள்ளாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலா் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலா் இரா.முத்தரசன், விசிக தலைவா் தொல் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவா் தி.வேல்முருகன் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT