தமிழ்நாடு

விளையாட்டு நகரம்: அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

DIN

விளையாட்டு நகரம் குறித்த முக்கிய அறிவிப்பை விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் அறிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இடம் கிடைக்காத பட்சத்தில் திருச்சியில் இடம் தேர்வு செய்து விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என்று விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள  செங்கிப்பட்டியில் விளையாட்டு நகரம் அமைக்க இடம் கண்டறியப்பட்டுள்ளது. விளையாட்டு நகரம் அமைக்க கண்டறியப்பட்டுள்ள இடம் குறித்து முதல்வரின் கவனுத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உலகத் தரத்தில் விளையாட்டு கட்டமைப்பை ஏற்படுத்த விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் விளையாட்டு நகரம் குறித்த அறிவிப்பை அமைச்சர் மெய்யநாதன் தகவல் வெளியிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

SCROLL FOR NEXT