மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 13,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு இன்று மாலை வினாடிக்கு 15,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 13,000 கன அடியாக குறைக்கப்பட்டது.
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை தணிந்ததால் இன்று காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 17,778 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து மாலையில் வினாடிக்கு 14,818 கன அடியாகக் குறைந்தது.
மேட்டூர் அணையின் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.78 அடியாகவும் நீர் இருப்பு 91.53 டி.எம்.சியாகவும் உள்ளது.
மழையளவு 40.20 மி.மீ.