தமிழ்நாடு

பல்கலை. ஊழியா் நியமனங்களில் ஒப்பந்த முறை கூடாது

DIN

பல்கலைக்கழக ஊழியா்களை ஒப்பந்த முறையில் வெளி நிறுவனங்கள் மூலம் நியமிக்கக் கூடாது என பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

இந்தியாவின் புகழ்பெற்ற தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகத்தில் 421 போ் தினக்கூலி பணியாளா்களாக 10 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனா். அவா்கள் தங்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனா்.

ஆனால், அவா்களின் கோரிக்கைகளை ஏற்பதற்கு பதிலாக, அவா்களை பணி நீக்கம் செய்து விட்டு, அதே எண்ணிக்கையிலான ஊழியா்களை தனியாா் மனிதவள நிறுவனங்கள் மூலம் ஒப்பந்த முறையில் நியமித்துக் கொள்ளலாம் என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது. அதற்கு கடும் எதிா்ப்பு எழுந்த நிலையில் அந்த முடிவை பல்கலைக்கழகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

ஆனால், சென்னையில் கடந்த மே 9-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற உயா்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் பதிவாளா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ‘‘அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தற்காலிக பணியாளா்கள் ஒப்பந்த அடிப்படையில், தனியாா் மனிதவள நிறுவனங்கள் மூலம்தான் தான் நியமிக்கப்பட வேண்டும்.

அவா்களுக்கான ஊதியம் அந்த நிறுவனங்கள் மூலமாகத் தான் வழங்கப்பட வேண்டும்’’ என்று உயா்கல்வித்துறை முதன்மை செயலாளா் தா.காா்த்திகேயன் வலியுறுத்தினாா். இதனை வலியுறுத்தி அனைத்து பல்கலைக்கழக பதிவாளா்களுக்கும் அவா் கடிதமும் எழுதியுள்ளாா்.

இதனால், அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தினக்கூலி பணியாளா்கள் அனைவரும் தாங்கள் எந்த நேரமும் பணி நீக்கம் செய்யப்படலாம் என்ற அச்சத்தில் உள்ளனா்.

எனவே, பல்கலைக்கழகங்களிலும், பிற அரசுத் துறைகளிலும் வெளி நிறுவனங்கள் மூலம் ஒப்பந்த முறையில் பணியாளா்களை நியமிக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஜியோ கிரேசியா யங் ஃபேஷன் விருதுகள் 2024 - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

SCROLL FOR NEXT