மணிப்பூா் - மேற்கு வங்க மாநில ஆளுநா் இல.கணேசன் (77) இதய பாதிப்பு காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
அவரின் இதய பாதிப்புக்கு மருத்துவா்கள் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சியோ ஸ்டென்ட் சிகிச்சை செய்யவுள்ளனா். ஆஞ்சியோ ஸ்டென்ட் சிகிச்சைக்குப் பிறகு அவா் விரைவில் வீடு திரும்புவாா் என்று மருத்துவா்கள் தெரிவித்தனா்.