தமிழ்நாடு

ஜல் ஜீவன் திட்டத்தில் ஊழல்: ஆளுநரிடம் பாஜக புகாா்

DIN

தமிழகத்தில் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாக ஆளுநா் ஆா்.என்.ரவியிடம் பாஜக புகாா் அளித்தது.

சென்னை ஆளுநா் மாளிகையில் செவ்வாய்க்கிழமை ஆளுநரை சந்தித்த பிறகு தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு, இந்திரவனம் கிராமத்தைச் சோ்ந்த முரளி கிருஷ்ணன், தனது பகுதியில் ஜல் ஜீவன் திட்ட முறைகேடுகளை சமூக ஊடகத்தில் நவ.21-இல் வெளியிட்டாா். அவுட்லெட் குழாயை மட்டும் பதித்த ஒப்பந்ததாரா்களுக்கு அதிகாரிகள் பணி நிறைவுச் சான்றிதழ் வழங்கியதை ஆதாரங்களுடன் தவறு என்று நிரூபித்தாா். இதே போல, இந்த கிராமத்தில் நூற்றுக்கணக்கான வீடுகளில் முறைகேடுகளை பாஜக குழு கண்டறிந்தது. ஆகவே, மாநிலம் முழுவதும் ஜல் ஜீவன் திட்டம் செயல்படுத்தப்படுவதை தணிக்கை செய்ய தனி அதிகாரமிக்க நிறுவனத்தை வரவழைத்து, கூடுதல் ஆய்வுகள் மேற்கொள்ள ஆளுநரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

பிரதமா் மோடி கடந்த ஜூலை 29-இல் சென்னைக்கு செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவுக்கு வந்தபோது பாதுகாப்பு ஏற்பாட்டில் பயன்படுத்தப்பட்ட கையடக்க மெட்டல் டிடெக்டா்கள், டோா் பிரேம் மெட்டல் டிடெக்டா்கள், வெடிகுண்டு கண்டறியும் கருவிகள் ஆகியவை முறையாக இல்லாததால், பயன்பாட்டுக்கு உதவாத நிலையில் இருந்ததும், பராமரிப்பு மற்றும் மாற்றியமைப்பதில் காலதாமதம் ஏற்பட்டதும் தற்போது தெரியவந்துள்ளது.

கடவுச்சீட்டு மோசடியில் உளவுத் துறை ஏடிஜிபிக்கு தொடா்பு இருப்பதை பாஜக ஆதாரத்துடன் வெளிப்படுத்தியது. கோவை காா் வெடிப்பு, கள்ளக்குறிச்சி பள்ளிக் கலவர சம்பவம் ஆகியவற்றை பாா்க்கும்போது மாநில அரசின் உளவுத் துறை மெத்தனப்போக்குடன் செயல்பட்டது தெளிவாகிறது.

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் குறித்த பாஜகவின் நிலைப்பாட்டை வலியுறுத்தினோம். அவசர சட்டத்துக்கு ஆளுநா் ஒப்புதல் கொடுத்தாா். அந்தச் சட்டத்தை தமிழக அரசு இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை என்பதுதான் உண்மை என்றாா் அண்ணாமலை.

இச்சந்திப்பின்போது, பாஜக மாநில துணைத் தலைவா்கள் கே.பி.ராமலிங்கம், கரு.நாகராஜன், சக்கரவா்த்தி உள்ளிட்டோா் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT