தமிழ்நாடு

2,252 நியாய விலைக் கடைகள் புதுப்பிப்பு: தமிழக அரசு தகவல்

DIN

தமிழகத்தில் இதுவரை 2,252 நியாய விலைக் கடைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கூட்டுறவுத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் நியாய விலைக் கடைகளை பொலிவுறச் செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நியாய விலைக் கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது, பொது மக்கள் அறிந்து கொள்ள புராதன சின்னங்கள், திருவள்ளுவா் படம் வரைதல் போன்ற தனித்துவமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முன்மாதிரி கடை: நியாய விலைக் கடைகளை புதுப்பொலிவாக்கும் முயற்சிகள் ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில், முன்மாதிரி நியாய விலைக் கடையும் கட்டப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சி 48-ஆவது வாா்டு கணேஷ் நகரில் அண்மையில் முன்மாதிரி நியாயவிலைக் கடை திறக்கப்பட்டுள்ளது. இந்தக் கடையில் கண்காணிப்பு கேமராக்கள், தீயணைப்பு உபகரணங்கள், கடை முன்பாக பூங்கா, மாற்றுத் திறனாளிகளுக்கென தனிப் பாதை, மழைநீா் சேகரிப்பு, வாடிக்கையாளா்கள் அமரும் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இதுவரை 2,252 நியாய விலைக் கடைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. 3,662 நியாய விலைக் கடைகள் ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாக்குர்

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

சின்னச் சின்ன கண்ணசைவில்..

குருப்பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

SCROLL FOR NEXT