தமிழ்நாடு

லாரி டயர் வெடித்து விபத்து: 6 பேர் படுகாயம்

DIN

மணல் லாரி டயர் வெடித்து, கடை வீதியில் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானதில், பெண் உள்பட ஆறு பேர் படுகாயமடைந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் ஆசனூர் மணல் குவாரியிலிருந்து மணல் ஏற்றிய லாரி ஒன்று தஞ்சை நோக்கி வந்து கொண்டிருந்தது. நடுக்கடை பகுதியில் வரும்போது திடீரென லாரியின் டயர் வெடித்தது. 

இதில் நிலை தடுமாறிய லாரி சாலையோர கடைகள் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் சாலை நடந்து சென்ற பெண் உள்பட ஆறு பேர் படுகாயமடைந்தனர். 

ஓட்டுனர் லாரிக்குள் சிக்கினார். அக்கம் பக்கத்தினர், காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஓட்டுநரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த விபத்தினால் தஞ்சை - அரியலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று மாலை பள்ளி மாணவி மீது மணல் லாரி மோதி விபத்து ஏற்பட்ட நிலையில், இன்று மணல் லாரி நிலை தடுமாறி கடைகளுக்குள் புகுந்ததால் ஆறு பேர் காயமடைந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. 

எனவே மணல் குவாரியை மூட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றும் விழிச் சுடர்... பாயல் ராஜ்புத்

"சிங்கத்துக்கும் சிறுத்தைக்கும் நடுவே மாட்டிக்கொண்ட ஆடு..”: செல்லூர் ராஜூ பேட்டி

தேர்தல் பணியில் ஒப்பந்தப் பணியாளர்கள்? மார்க்சிஸ்ட் புகார்

காஷ்மீர்: பள்ளிக் குழந்தைகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து! 6 பேர் பலி

மாடர்ன் ரதி.....பிரியங்கா அருள் மோகன்

SCROLL FOR NEXT